செவ்வாய், 15 அக்டோபர், 2019

சர்வதேச ஆசிரியர் தினம்


      யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினம் 05.10.2019 அன்று வித்தியாலய மண்டபத்தில் பாடசாலைச் சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டது. வித்தியாலய உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் க. யதுசன் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வுக்கு வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியரும் தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபருமாகிய திரு கி. இராஜதுரை அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். 

  ஆசிரியர்களுக்கான விளையாட்டுக்களும் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நிகழ்வில் ஆசிரியர்களுக்கான அன்பளிப்புக்களுக்கான அநுசரணையை வித்தியாலய பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு சி. சுதந்திரதாஸ் அவர்களும் வித்தியாலய நலன்விரும்பி திருமதி உதயதேவி சண்முகதாஸ் அவர்களும் வழங்கியிருந்தனர். வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் பாடசாலைச் சமூகம்  கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான போட்டிகளை நிகழ்த்தி பரிசில் வழங்கியும் மகிழ்வித்தனர்.




















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக