திங்கள், 16 நவம்பர், 2020

புலமைப் பரிசில் பரீட்சையில் வடமராட்சி வலயத்தில் முதன்மைப் புள்ளிகளைப் பெற்ற தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன்

 


யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன் செல்வன் சசிதரன் பவநிதன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்றுள்ளார். வடமராட்சி வலயத்தில் முதன்மைப் புள்ளிகளைப் பெற்ற மாணவனை வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் குழாத்தினர் நேரில் வருகை தந்து பாரட்டினர். 

மேற்படி பாடசாலையில் இருந்து தோற்றியோரில் செல்வன் உதயகுமார் வருணிஜன் 164 புள்ளிகளையும் செல்வன் மகேஸ்வரன் தேனுஸ்ராஜ் 163 புள்ளிகளையும் பெற்றனர். மேற்படி வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் பரீட்சையில் தோற்றி 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற ஏனைய மாணவர்களையும் வழிகாட்டிய ஆசிரியர்களையும் பாரட்டி வாழ்த்துகின்றோம்.

 தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்.




தமிழ்வலம் பத்திரிகையில் வெளிவந்த செய்தி