புதன், 23 அக்டோபர், 2019

வினைத்திறனான கற்றலிற்கான இலகு பொறிமுறைகள் – குறுகிய கருத்தரங்கு



   யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு வினைத்திறனான கற்றலிற்கான இலகு பொறிமுறைகள் என்ற தலைப்பிலான குறுகிய கருத்தரங்கு 21.10.2019 அன்று வித்தியாலய மண்டபத்தில் அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது. கருத்தரங்கினை IDM Nelliady Campus நிர்வாக இயக்குநர் திரு ஆர். அரவிந்தன் நிகழ்த்தினார்.

  நிகழ்வில் மாணவர்கள் வினைத்திறனான வகையில் பரீட்சைக்கான கற்கையைக் கற்று சவால் மிகுந்த எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தம்மைத் தயார்ப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. கருத்தரங்கில் மாணவர்களுக்கான செயற்பாட்டு முறையிலான சிறிய போட்டியும் ஒழுங்கமைக்கப்பட்டு ஊக்குவிப்புப் பரிசில் வழங்கப்பட்டது.நிகழ்வில் நன்றியுரையை ஆசிரியர் சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக