திங்கள், 28 டிசம்பர், 2020

சேவைநலன் பாராட்டு


   யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் அண்மையில் சேவையிலிருந்து மாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களுக்கும் சுயவிருப்பில் ஓய்வுபெற்றுச் சென்ற திருமதி செல்வரஞ்சினி கெனடி அவர்களுக்குமான சேவைநலன் பாராட்டு நிகழ்ச்சி சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மிக எளிமையாக வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

          தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை ஆசிரியர் பணியாளர் நலன்புரிச் சங்கத் தலைவர் பிரதிஅதிபர் நா. ரவீந்திரன் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்ச்சியில் சேவையில் இருந்து மாற்றலாகிச் சென்ற திருமதி பாமினி ஜெயந்தன், திருமதி கமலினி கிருபாகரன், திரு சி. வசந்தகுமார், திருமதி சி. சிவபாஸ்கரன், செல்வி க. ரஜனி ஆகியோரையும்; சுயவிருப்பில் ஓய்வுபெற்றுச் சென்ற திருமதி செல்வரஞ்சினி கெனடி அவர்களையும் பாராட்டி; அதிபர், பிரதி அதிபர், மூத்த ஆசிரியர்கள் உரை நிகழ்த்தினர். நன்றியுரையை திரு வ. திருக்குமாரன் ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தினார்.





























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக