திங்கள், 22 பிப்ரவரி, 2021

மாணவர்களின் வாசிப்புக்கான நூல்கள் அன்பளிப்பு

 யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்கள்  அன்பளிப்புச் செய்துள்ளார். 

வித்தியாலய மாணவர்களின் வாசிப்பு ஆற்றலை மேம்படுத்தும் பொருட்டு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் உள்ளடங்கிய ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. நூல்களை வித்தியாலயம் சார்பில் ஆசிரியர்கள் சு.குணேஸ்வரன், துகாரதி ஞானச்சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்களுக்கு வித்தியாலயம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. 


காட்சிப்படுத்தப்பட்ட நூல்களை 
மாணவர்கள் பார்வையிடுகின்றனர். 




கால்கோள் விழா



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா அண்மையில் இடம்பெற்றது. நிகழ்வில்  தரம் 1 மாணவர்கள் தரம் 2 மாணவர்களால் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து வித்தியாலய மண்டபத்தில் நிகழ்வு எளிமையாக நடைபெற்றது. 

வித்தியாலய அதிபரின் வாழ்த்துரையுடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் புதிய மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடுகை செய்யப்பட்டன. பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள் 




































சேவை நயப்பு விழா - பிரதி அதிபர் நா. ரவீந்திரன்

     யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராகப் பணியாற்றி யா/ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்திற்கு  அதிபராகப் பதவியுயர்வு பெற்றுச் சென்ற திரு நா. ரவீந்திரன் அவர்களுக்கான சேவை நயப்பு விழா கடந்த 16.02.2021 அன்று வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. 

     வித்தியாலய ஆசிரியர் - பணியாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர் அவர்களைப் பாராட்டி வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் வாழ்த்துரைகளை நிகழ்த்தினர். மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. வித்தியாலய ஆசிரியர் பணியாளர் நலன்புரிச் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியோர் மாலையிட்டு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில்களை வழங்கிக் கௌரவித்தனர். மாணவர்களும் மாலையிட்டு அன்பளிப்புகளை வழங்கிச் சிறப்பித்தனர். 

 நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.