திங்கள், 24 ஜூன், 2019
துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் (TORONTO BLUES FOUNDATION) அமைப்பினர் அண்மையில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டியை அன்பளிப்புச் செய்தனர்.
தரம் 11 இல் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர் ஒருவருக்கு இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வு 14.06.2019 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் ரொன்ரோ புளுஸ் பவுண்டேசனின் வல்வைப் பிரதிநிதி திரு இ.சுரேன், இணைப்பாளர் திரு சி. ஜெயப்பிரதாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா ரொரன்ரோ புளுஸ் அமைப்பினர் முன்னரும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமையைப் பாராட்டி அவர்களின் நலன்புரிச் சேவைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
வியாழன், 13 ஜூன், 2019
மாகாண மட்டப் போட்டிகளில்..
கடற்கரைக் கரப்பந்தாட்டாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளிலும் பங்குபற்றிய அணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
செவ்வாய், 4 ஜூன், 2019
சிதம்பரா கணிதப் போட்டி – 2019
https://chithambaramaths.com/srilanka-results/
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)