வெள்ளி, 22 மார்ச், 2019

களப்பயணம் 2019



    தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர்களின் களப்பயணம் 04.03.2019 அன்று இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்பொருள் மற்றும் கலை பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்தும் இடங்களில் தெரிவுசெய்யப்பட்ட சில பகுதிகளுக்கு சென்றனர்.

    மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம், நாவற்குழி திருவாசக அரண்மனை, யாழ்.திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலாமுற்றம் (Jaffna Art Gallery), மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி, யாழ்,கோட்டை, DD தொலைக்காட்சி கலையரங்கம், ஆஞ்சநேயர் ஆலயம், நகுலேஸ்வரம், மாவிட்டபுரம், கந்தரோடை தொல்லியல் மையம் ஆகிய இடங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.






















வியாழன், 21 மார்ச், 2019

ஆய்வுதினம்



தொழில் வழிகாட்டல்

 பாடசாலை ஆய்வுகள் தினம் 14.03.20196 அன்று யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

    நிகழ்வில் தரம் 10-13 வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர். வளவாளர்களாக யாழ் தொழில்நுட்பக் கல்லூரி தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் திரு வே. சபேசன், பருத்தித்துறை திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு முரளிதரன் மற்றும் மனிதவள உத்தியோகத்தர் திருமதிஜா. சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

 மேற்படி நிகழ்வில் “இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள சுயதொழில் வாய்ப்புக்கள் தொடர்பான தேடல்” என்ற கருப்பொருளில் கருத்துரைகள் இடம்பெற்றன.