வியாழன், 9 நவம்பர், 2017

வழிகாட்டலும் ஆலோசனையும் – பயிற்சிப் பட்டறை



     யா|தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் இரண்டு நாள்கள் வழிகாட்டலும் ஆலோசனையும் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டது. ஒக்டோபர் முதல்நாள் பட்டறையில் தரம் 12,13 மாணவர்கள் பங்குபற்றினர். இதில் திருமதி குலேந்திரராஜா சகரஜராணி, திரு க. கலைமாறன், திரு இ. சுபதீபன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களை நெறிப்படுத்தினர்.

    இரண்டாம் நாள் பயிற்சி 26.10.2017 அன்று இடம்பெற்றது. இதில் தரம் 9 மற்றும் தரம் 10 மாணவர்கள் கலந்து கொண்டனர். யாழ் மாவட்ட செயலக தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக (ONUR Officer) உளசமூக சேவையாளர்கள் இப்பட்டறையை நிகழ்த்தினர். இதில் வளவாளர்களாக பா. சிவரஞ்சன், க. கலைமாறன், . சுதீபன், இ. கஜானா, ஜி நிவாஸ், ஆர் வாகீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக