வெள்ளி, 15 ஜனவரி, 2021

கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு



யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (13.01.2021) வழங்கப்பட்டன. “லஷ்மிசோதி நம்பிக்கை நிதியத்தின்” திரு சுகுமார் சிவசோதித்துரை மேற்படி அன்பளிப்பை வழங்கியுள்ளார். நிகழ்வில் இந்து அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் திருமதி தமிழ்ச்செல்வி மதியழகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இந்த அன்பளிப்புக்களை வழங்கி வைத்தார். மேற்படி நிதியத்தினருக்கு பாடசாலைச் சமூகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக