ஞாயிறு, 20 டிசம்பர், 2020

5 கணனித் தொகுதிகள் அன்பளிப்பு


   யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் கணனிக் கல்வியை ஊக்குவிக்கும்வகையில் (AVR Trust) ஏவீஆர் அறக்கட்டளையின் ஊடாக 5 கணனித் தொகுதிகளை திரு திருமதி சிவகுமார் விசாலினி தம்பதியினர் வித்தியாலயத்திற்கு கையளித்தனர். 

    திருமதி சி.விசாலினி அவர்கள் வித்தியாலயத்தின் பழைய மாணவியும் டாக்டர் விசாகரத்தினம் (தொண்டைமானாறு) அவர்களின் புதல்வியும் ஆவார். 21.12.2020 அன்று வித்தியாலய மண்டபத்தில் அதிபர் இரா. சிறீநடராசா முன்னிலையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் கணனிக் கல்விக்குப் பொறுப்பான இணை ஆசிரியர்  திரு செ. கணேசலிங்கம் அவர்கள் கணனிகளைப் பொறுப்பேற்றார். பிரதி அதிபர் த. இராஜசேகரன் அவர்கள் ஏவீஆர் அறக்கட்டளையின் சமூகப் பணிக்கு நன்றி தெரிவித்தார். 

   ஏவீஆர் அறக்கட்டளையின் இப்பணிக்கு பாடசாலைச் சமூகமும் நன்றி தெரிவிக்கின்றது. 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக