திங்கள், 8 பிப்ரவரி, 2016

கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு



   கனடாவாழ் நலன்விரும்பிகள் 01.02.2016 அன்று தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களில் ஒரு தொகுதியினருக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினர். இந்நிகழ்வில் 70 மாணவர்களுக்கு சப்பாத்து, புத்தகப்பை மற்றும் எழுதுகருவிகளை வழங்கினர். இந்நிகழ்வு வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இவர்கள் தொடர்ந்தும் மாணவர்களுக்கு உதவிகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக