சனி, 6 பிப்ரவரி, 2016

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி - 2016



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி 06.02.2016 மாலை 1.30 மணிக்கு நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு இரா சிறீநடராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக நெல்லியடி சம்பத் வங்கி முகாமையாளர் திரு மாக்சன் விஜேந்திரா அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக யாழ் பரியோவான் கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியர் திரு இ.இரகுநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். திருமதி பயோதரியம்மா இராஜசேகரம் குடும்பத்தினர்; விளையாட்டுப் போட்டிக்கான அனுசரணையை இவ்வருடமும் வழங்கியிருந்தனர். வீரகத்திப்பிள்ளை இல்லம் (நீலம்), சுப்பையா இல்லம் (சிவப்பு), இராசரத்தினம் இல்லம் (பச்சை) ஆகிய இல்லங்களுக்கு இடையிலான போட்டியில் 2016 ஆம் வருடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை இராசரத்தினம் இல்லம் (பச்சை)தட்டிக்கொண்டது. மாணவர்கள், அதிபர்,ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் ஆகியோரின் பூரண பங்களிப்புடன் மிகச் சிறப்பாக இவ்வருட விளையாட்டுப்போட்டி நடைபெற்று நிறைவுபெற்றது.











































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக