வியாழன், 10 டிசம்பர், 2020

கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

   

தொண்டைமானாறு இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஒரு தொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்துள்ளனர். கடந்த 25.11.2020 அன்று யா / தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும், தேவைப்பாடு உள்ள ஒரு தொகுதி மாணவர்களுக்கு வழங்குவதற்காக இருபத்தைந்தாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்களிடம் கையளித்தனர். அவை பின்னர் மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. தொண்டைமானாறு இளைஞர் இளைஞர் நற்பணி மன்றத்தினருக்கு வித்தியாலயம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

செவ்வாய், 1 டிசம்பர், 2020

துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு


தொண்டைமானாற்றைச் சேர்ந்த சண்முகராஜா வள்ளி அமிர்தராணி ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் துவிச்சக்கர வண்டி ஒன்றினை யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய பாடசாலை மாணவருக்கு அன்பளிப்பாக வழங்கி உதவியுள்ளனர். 

தரம் 5 இல் கல்வி கற்கும் செல்விகள் ச. லக்சிகா, ச.லின்சிகா ஆகிய சகோதரிகளுக்கு மேற்படி துவிச்சக்கரவண்டி கற்றல் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு வழங்கப்பட்டது. மேற்படி குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.