செவ்வாய், 1 டிசம்பர், 2020

துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு


தொண்டைமானாற்றைச் சேர்ந்த சண்முகராஜா வள்ளி அமிர்தராணி ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் துவிச்சக்கர வண்டி ஒன்றினை யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய பாடசாலை மாணவருக்கு அன்பளிப்பாக வழங்கி உதவியுள்ளனர். 

தரம் 5 இல் கல்வி கற்கும் செல்விகள் ச. லக்சிகா, ச.லின்சிகா ஆகிய சகோதரிகளுக்கு மேற்படி துவிச்சக்கரவண்டி கற்றல் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு வழங்கப்பட்டது. மேற்படி குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. 

திங்கள், 16 நவம்பர், 2020

புலமைப் பரிசில் பரீட்சையில் வடமராட்சி வலயத்தில் முதன்மைப் புள்ளிகளைப் பெற்ற தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன்

 


யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன் செல்வன் சசிதரன் பவநிதன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்றுள்ளார். வடமராட்சி வலயத்தில் முதன்மைப் புள்ளிகளைப் பெற்ற மாணவனை வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் குழாத்தினர் நேரில் வருகை தந்து பாரட்டினர். 

மேற்படி பாடசாலையில் இருந்து தோற்றியோரில் செல்வன் உதயகுமார் வருணிஜன் 164 புள்ளிகளையும் செல்வன் மகேஸ்வரன் தேனுஸ்ராஜ் 163 புள்ளிகளையும் பெற்றனர். மேற்படி வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் பரீட்சையில் தோற்றி 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற ஏனைய மாணவர்களையும் வழிகாட்டிய ஆசிரியர்களையும் பாரட்டி வாழ்த்துகின்றோம்.

 தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்.




தமிழ்வலம் பத்திரிகையில் வெளிவந்த செய்தி