செவ்வாய், 19 ஜூலை, 2016

உயர்தர மாணவர் ஒன்றுகூடல் – 2016



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய உயர்தர மாணவர் ஒன்றுகூடல் 16.07.2016 அன்று காலை 9.30 மணிக்கு உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் யோ. தயன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு வித்தியாலயத்தின் பழைய மாணவி செல்வி துஷித்தா குலேந்திரன் (பொறியியலாளர் – கொழும்பு) பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கிய “கலை ஊற்று” (இதழ் – 2) என்ற இதழும் வெளியிடப்பட்டது.






இதழில் உள்ளடங்கியுள்ள மாணவர்களின் ஓவியங்கள் சில..



பதிவும் படங்களும் :சு.குணேஸ்வரன் (ஆசிரியர்)

வியாழன், 16 ஜூன், 2016

ஆராரோ ஆரிவரோ கவிதைநூல் மற்றும் ஒலிப்பேழை அறிமுக நிகழ்ச்சி




ஆசிரியர்வீ . வீரகுமார் (தென்பொலிகை குமாரதீபன்) எழுதிய ஆராரோ ஆரிவரோ கவிதை நூல் மற்றும் உணர்வெழு கானங்கள் ஒலிப்பேழை அறிமுகநிகழ்வு அண்மையில் யா தொண்டைமானாறு வீ. ம. வித்தியாலத்தில் அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் அறிமுகவுரையை இ. உதயசங்கர் ( வதிரிவாசன்) அவர்களும், நயப்புரைகளை வேல் ந ந்தகுமார் மற்றும் வே. அகிலன் (அகியோபி) ஆகியோர் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் வீ. வீரகுமார் (தென்பொலிகை குமாரதீபன் ) நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
பதிவும் படங்களும் : சு.குணேஸ்வரன்