புதன், 23 ஜனவரி, 2019

போதைக்கு எதிரான பாடசாலையின் பலம்

போதைப்பொருள் தடுப்பு பாடசாலைச் செயற்றிட்டம்

   21.01.2019 முதல் 25.01.2019 வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு 23.01.2019 அன்று காலை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் போதைக்கு எதிரான பாடசாலையின் பலம் என்ற பொருளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றது.
   இந்நிகழ்வில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் வருகைதந்து மேற்படி விடயம் தொடர்பாக கருத்துரை மற்றும் அது தொடர்பான காணொலிக் காட்சியின் ஊடாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேற்படி நிகழ்வு வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வல்வெட்டித்துறை உதவிப் பொலிஸ் பரிசோதகர் எம். ஏ.எஸ். முனசிங்க, பொலிஸ் உத்தியோகத்தர்களாகிய டி. எம். அபேகோன், என். டியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை நிகழ்த்தினர்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக