வெள்ளி, 1 ஜூன், 2018

பாதணிகள் வழங்கி வைப்பு



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்களில் ஒரு தொகுதியினருக்கு பாதணிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு 01.06.2018 அன்று வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அரசடி தொண்டைமானாறு சின்னத்தம்பி பிள்ளையான் நினைவாக அன்னாரது மகளும் வித்தியாலய பழைய மாணவியுமாகிய இதயகுமார் ரகுதா (பிரான்ஸ்) ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு ஒரு தொகுதி பாதணிகளை அன்பளிப்பாக வழங்கி உதவியுள்ளார்.

அரசடி தொண்டைமானாறு அமிர்தலிங்கம் ஜெயரூபன் (சுவிஸ்) அவர்கள் தமது 32 ஆவது பிறந்தநாளையொட்டி இடைநிலைப்பிரிவு மாணவர்களுக்கு ஒரு தொகுதி பாதணிகளை அன்பளிப்பாக வழங்கி உதவியுள்ளார்.

பழைய மாணவர்கள் இருவருக்கும் பாடசாலைச் சமூகத்தின் நன்றி உரித்தாகட்டும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக