புதன், 15 ஜூலை, 2015

இயற்கையோடு இணைந்த வாழ்வு – பிரதிபலிப்புமுறை (Reflexology) சிகிச்சை உரையும் விளக்கமும்




யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் “இயற்கையோடு இணைந்த வாழ்வு – பிரதிபலிப்புமுறை (Reflexology) சிகிச்சை” தொடர்பான உரையும் விளக்கமும் 14.07.2015 செவ்வாய்க்கிழமை காலை வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரபலிப்புமுறை (Reflexology) சிகிச்சை தொடர்பான விளக்கத்தையும் செய்முறை விளக்கத்தினையும் திருமதி இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்கள் நிகழ்த்தினார்.

வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் குறித்த சிகிச்சை முறை பற்றியும் திருமதி இராஜேஸ்வரி பற்றியும் அறிமுக உரையினை உடுப்பிட்டி மகளிரி கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி புனிதவதி சண்முகலிங்கன் நிகழ்த்தினார். தொடர்ந்து பிரதிபலிப்புமுறை சிகிச்சை பற்றிய விளக்கத்தினையும் செய்முறையினையும் திருமதி இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து மாணவர்களதும் ஆசிரியர்களதும் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.





படங்களும் பதிவும் : சு. குணேஸ்வரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக