புதன், 12 ஆகஸ்ட், 2020

திறன் வகுப்பறைத் திறப்புவிழா

 



தொண்
டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தில் திறன் வகுப்பறைத் (SMART CLASS ROOM) திறப்பு விழா  12.08.2020 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. தொண்டைமானாறு நற்பணி மன்றத்தின் ஊடாக விடுத்த வேண்டுகோளையடுத்து திருமதி  தேவசிகாமணி தனரத்தினம் அவர்களின் மகன் திரு தே. ஆனந்தக்குமரன் (லண்டன்) அவர்களின் நிதியுதவியில் சாதாரண வகுப்பறையானது திறன் வகுப்பறையாக மாற்றியமைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வு வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு யோ. ரவீந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் திருமதி தேவசிகாமணி தனரத்தினம் சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர் இணைந்து திறன் வகுப்பறையைச் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.

நிகழ்வில் பாடசாலைச் சமூகத்தினர் கலந்து சிறப்பித்தனர்.





வரவேற்புரை - பிரதி அதிபர் T. இராஜசேகரம் 


தலைமை - வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா 


கெளவர விருந்தினர் உரை - திருமதி தேவசிகாமணி தனரத்தினம்


உரை - தொண்டைமானாறு நற்பணி மன்றத் தலைவர் திரு தெ. சசீந்திரன் 


பிரதம விருந்தினர் உரை - வடமாராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு யோ. ரவீந்திரன் 


நன்றியுரை - பிரதி அதிபர் திரு நா. ரவீந்திரன் 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக