சனி, 2 நவம்பர், 2019

தேசிய வாசிப்பு மாதம் – போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு


   யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய வாசிப்பு மாதத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு 01.11.2019 அன்று காலை வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்களின் வாழ்த்துரையைத் தொடந்து “வாசிப்பின் மேன்மை’ என்ற பொருளில் ஆசிரியர் வீ. வீரகுமார் உரை நிகழ்த்தினார். போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

  அமரர் கமலாதேவி யோகநாதன் ஞாபகார்த்தமாக திரு திருமதி வர்ணகுலசிங்கம் அவர்களின் நிரந்தர நிதியத்திலிருந்து பரிசில்கள் வழங்கப்பட்டன. “வெற்றி பெறுவது எப்படி” என்ற காணொளியும் காண்பிக்கப்பட்டது. இறுதியாக நன்றியுரையை ஆசிரிய நூலகர் திருமதி கெனடி செல்வரஞ்சினி நிகழ்த்தினார். நிகழ்வுகளை ஆசிரியர் மா. செல்வரட்ணம் தொகுத்து வழங்கி நெறிப்படுத்தினார்.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக