ஞாயிறு, 11 நவம்பர், 2018

வாசிப்பு மாதம் –பரிசளிப்பு நிகழ்ச்சி



யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய வாசிப்பு மாதப் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்ச்சி 10.11.2018 சனிக்கிழமை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்ச்சிக்கு வடமராட்சி கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் நூலக இணைப்பாளருமாகிய திரு து, ராமதாஸ் மற்றும் வசாவிளான் மத்திய கல்லூரி நூலக ஆசிரியரும் வளவாளருமாகிய திரு நி. பவானந்தசர்மா ஆகியோர் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான அநுசரணையை திருமதி கமலாதேவி யோகநாதன் ஞாபகார்த்த நிதியத்தினரும் திரு திருமதி மதியழகன் தமிழ்ச்செல்வியும் வழங்கியிருந்தனர். நிகழ்ச்சியில் வித்தியாலய நூலகத்திற்குப் பொறுப்பான ஆசிரிய நூலகர் திருமதி செல்வரஞ்சினி கெனடிநன்றியுரை நிகழ்த்தினார். மேற்படி நிகழ்ச்சியில் வாசிப்பு மாதத்தையொட்டி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளுக்குரிய பரிசளிப்பும் மாணவர்களின் பரிசில் பெற்ற ஆக்கங்களும் இடம்பெற்றன.

(ஒளிப்படங்கள்,நன்றி - இன்பன், றஞ்சன்)























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக