செவ்வாய், 14 மார்ச், 2017

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அணி, வடமராட்சி வலய மட்ட கரப்பந்தாட்டம் 4 பிரிவுப் போட்டிகளில் சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.


வலய மட்ட கரப்பந்தாட்டம் 4 பிரிவுப் போட்டிகளில் சம்பியன் கிண்ணத்தை யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அணியினர் பெற்றுக்கொண்டனர்.

வடமராட்சி வலய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டிகளில் 16 வயது, 18 வயது, 20 வயது ஆண்கள்  பிரிவினர் சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டனர். அதேவேளை ஆண்களுக்கான கடற்கரைப் பந்தாட்டத்திலும் சம்பியனாகியது. பெண்களுக்கான கடற்கரைப் பந்தாட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.  போட்டிகளில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கும் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக