வெள்ளி, 6 ஏப்ரல், 2018

மாணவர்களுக்கான குடிநீர் ஒழுங்கமைப்புத் தொட்டி அமைத்தல்



யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் தேவை கருதி குடிநீர் ஒழுங்கமைப்புத் தொட்டி ஒன்றினை அரசடி தொண்டைமானாற்றைச் சேர்ந்த மறைந்த சின்னத்தம்பி பிள்ளையான் நினைவாக அவரது குடும்பத்தினர் அமைத்துக் கொடுத்தனர்.

வித்தியாலய பழைய மாணவனும் சின்னத்தம்பி பிள்ளையானின் புதல்வனுமாகிய பி. ரதன் (பிரான்ஸ்) தனது தாயாருடன் இணைந்து  குறித்த குடிநீர் ஒழுங்கமைப்புத் தொட்டியினை சம்பிரதாய பூர்வமாக (06.04.2018) கையளித்தனர். இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.






படங்கள் : ரூபரஞ்சன், குணேஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக